Total Pageviews

Wednesday, February 23, 2011

திருக்குறள் - 14



திருக்குறள் - 14
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

பொருள்:  மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

Monday, February 21, 2011

திருக்குறள் - 13



திருக்குறள் - 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
பொருள்: கடல் நீர் சூழ்ந்த உலகமாயினும், மழை நீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.

Wednesday, February 16, 2011

திருக்குறள் - 12


திருக்குறள் - 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை. 
பொருள்:  யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத் தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அருந்தும் உணவாகவும் ஆகி அறிய தியாகத்தை செய்கிறது.

Thursday, February 10, 2011

திருக்குறள் - 11


திருக்குறள் - 11
-- வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரப் பாற்று.
-- பொருள்:  உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் மழை அமிழ்தம் என போற்றப்படுகிறது. 

இனிது இனிது இந்தியா இனிது.

இனிது இனிது இந்தியா இனிது.
இனிது இனிது இந்தியனாய் பிறத்தல் இனிது.

Wednesday, February 9, 2011

திருக்குறள் - 10


திருக்குறள் - 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பொருள்:  இறைவன் அடி சேராதவர்கள், வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முடியாது.

Tuesday, February 8, 2011

திருக்குறள் - 9


திருக்குறள் - 9
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
பொருள்: உடல், கண், காது, மூக்கு, வாய், எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்கா விட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

திருக்குறள் - 8


திருக்குறள் - 8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
பொருள்:  அந்தணர் என்பதற்கு பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்த சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி மற்றவர்களுக்கு பிற துன்பக்  கடலை கடப்பது எளிதான காரியம் அன்று.

Monday, February 7, 2011

திருக்குறள் - 7


திருக்குறள் - 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
பொருள்:  தனக்கு உவமை இல்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழி ஏதும் இல்லை. 

திருக்குறள் - 6


திருக்குறள் - 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
பொருள்: மெய், வாய், கண், மூக்கு, செவி, எனும் ஐம்பொறிகளையும் கட்டுபடுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியை பின்பற்றி நிற்பவர்களின் வாழ்வு, நிலையானதாக அமையும்.

திருக்குறள் - 5


திருக்குறள் - 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
பொருள்: இறைவன் என்பதற்கரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

திருக்குறள் - 4



திருக்குறள் - 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பொருள்: விருப்பு வெறுப்பற்று தன்னலமின்றி திகழ்கின்றவரை பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை. 

Friday, February 4, 2011

திருக்குறள் - 3



திருக்குறள் - 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
பொருள்: மலர் போன்ற மனதில் நிறைந்தவனை பின் பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

திருக்குறள் - 2



திருக்குறள் - 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.
பொருள்:  தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையானின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

திருக்குறள் - 1


திருக்குறள் - 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள்: அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதி பகவன்,உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

திருவள்ளுவரின் திருக்குறள் நீடூழி வாழ்க


திருவள்ளுவருக்கு  ஒரு முனிவராக போற்றுவதற்கு உண்டான எல்லா தகுதியும் உள்ளது.  திருவள்ளுவரின் திருப்புகழ் நீடூழி வாழ்க.
திருவள்ளுவரின் திருக்குறள் நீடூழி வாழ்க.